×

நடுரோட்டில் ஓடஓட விரட்டி ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 10 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சுரேஷ் (24), ரவுடி. இவர் நந்தினி என்பவரை திருமணம் செய்து மணலியில் வசித்து வருகிறார். தம்பதிக்கு, 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் ஜே.ஜே.நகர் மாதா கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய சுரேஷ், வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 10 பேர் அரிவாளால் வெட்டினர். சுதாரித்துக்கொண்ட சுரேஷ், அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் சுரேஷ் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் போலீசார், சுரேசை  மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ், அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவரின்  கையை உடைத்துள்ளார்.  இதில் ஆத்திரமடைந்த மைக்கேல், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சுரேஷை வெட்டியது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அவரை  போலீசார் தேடி வருகின்றனர்….

The post நடுரோட்டில் ஓடஓட விரட்டி ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 10 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Roudy ,Nadurode ,PANTHADARBATTA ,KORKUPATTA J. JJ Suresh ,Rowdy ,nandini ,Nadurote ,
× RELATED ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி