×

ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி

 

புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ், பிரபல ரவுடியான இவர் மீது, புதுச்சேரி காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் திருவள்ளுவர் சாலையில் உள்ள சண்முகா திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றார். அப்போது, அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததால் திரையரங்கு ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆத்திரமடைந்த அந்த கும்பல், திரையரங்கு ஊழியர்களை தாக்கியது. மேலும் திரையரங்கில் இருந்த கண்ணாடி ஷோகேஸ், கம்ப்யூட்டர், பாப்கான் தயாரிக்கும் இயந்திரத்தை அடித்து நொறுக்கியது.

இந்த சம்பவம் குறித்து திரையரங்கு உரிமையாளர் சுரேஷ், உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விஷ்வா என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ரவுடி சதீஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரோடியார்பேட் சதீஷின் மனைவி தஸ்லீம்பேகம் வேலை செய்யும் இடத்தில் கையை அறுத்துக் கொண்டும், விஷம் அருந்தியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

விசாரணையில் கணவர் சதீஷை தேடி உருளையன்பேட்டை போலீசார் இரவு நேரங்களில் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுப்பதாகவும், வேலை செய்யும் இடத்துக்கு வந்து இரண்டு நாட்களாக தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும், வேலைக்கு செல்லும்போது வழிமறித்து திட்டியதாகவும் புகார் கூறியுள்ளார். திரையரங்கை ஒரு கும்பல் தாக்கிய வீடியோ வைரலாகி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், அதில் தொடர்புடைய ஒருவரின் மனைவி போலீசார் தொல்லை கொடுப்பதாக கூறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

The post ரவுடியின் மனைவி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Roudy ,Puducherry ,Rodierbade ,Roudi ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு