×

பிரேசில் நிலச்சரிவு 116 பேர் மாயம்

பெட்ரோபொலிஸ்: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கார்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவால் அப்பகுதியில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று வரையில் 117 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 116 பேர் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு நடந்து 3 நாட்களாகி விட்டதால், இவர்களில் பெரும்பாலோர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது….

The post பிரேசில் நிலச்சரிவு 116 பேர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Brazil ,Petropolis ,Rio de Janeiro ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...