×

கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி வயதான தம்பதி தற்கொலை: கீழ்க்கட்டளையில் பரிதாபம்

சென்னை:  கீழ்க்கட்டளை ராம டாக்டர் ராமமூர்த்தி நகர் 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் நம்பிராஜன் (76). சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பாப்பா (75). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லாததால் தனிமையில் வசித்து வந்தனர். இந்நிலையில் நம்பிராஜனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாவும் நுரையீரல் புற்றுநோய்க்கு பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இதனிடையே, நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி நேற்று முன்தினம்  தொலைபேசியில் நம்பிராஜன் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த சுப்பிரமணி, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்து கதவை தட்டியுள்ளார். உள்தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, நம்பிராஜன் வரவேற்பு அறையிலும், பாப்பா படுக்கை அறையிலும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்    . இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய கணவன், மனைவி ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.    …

The post கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி வயதான தம்பதி தற்கொலை: கீழ்க்கட்டளையில் பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dokpattattalai Rama Dr ,Ramamurthi Nagar ,2nd Main Road of Namirajan ,76 ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...