×

பாலியல் தொழிலாளி கதை அலியா பட் மீது வழக்கு

மும்பை: பாலியல் தொழிலாளி கங்குபாய் வேடத்தில் நடிப்பதால், பாலிவுட் நடிகை அலியா பட் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கங்குபாய் கத்தியவாடி இந்தி படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் 25ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மும்பையில் வாழ்ந்த கங்குபாய் என்ற பெண்ணின் கதையைப் படமாக்கியுள்ளனர். கங்குபாயாக அலியா பட் நடித்துள்ளார். படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாகவும், பிறகு பாலியல் தொழில் நடத்துபவராகவும் நடிக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கங்குபாயின் வளர்ப்பு மகன், இப்படத்தின் தயாரிப்பாளர்கள், சஞ்சய் லீலா பன் சாலி, அலியா பட் ஆகியோர் மீது மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து அவரது வக்கீல் நரேந்திர துபே கூறுகையில், ‘எந்த மகனும் தன்னுடைய தாயை இழிவாக காட்டுவதை விரும்ப மாட்டான். அந்தவகையில் கங்குபாயின் மகன் இந்தப் படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். படத்துக்கு தடை கேட்டிருக்கிறோம்’ என்றார். படக்குழுவினர் கூறும்போது, ‘ஹுசேன் ஜைதி எழுதிய மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை என்ற நூலை தழுவியே இந்தப் படம் உருவாகியுள்ளது’ என்றனர்….

The post பாலியல் தொழிலாளி கதை அலியா பட் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Alia Bhatt ,Mumbai ,Bollywood ,Gangubai ,Sanjay Leela… ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...