×

மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

திருவள்ளூர்: மீன்பிடித்தபோது குளத்தில் மூழ்கி வாலிபர் இறந்தார். திருவள்ளூரை அடுத்த சிறுகடல், திருமலை நகரை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரின் மகன் திலீப் (23). இவர் எலக்ட்ரீசியன். இவரின் மனைவி புனிதா (21). கடந்த இரண்டு வருடத்துக்கு முன் திருமணம் நடந்த இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்றுமுன்தினம் பிற்பகல் திலீப், தொட்டிக்கலை கிராமத்தில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அங்கு வலைவிரித்து மீன்பிடித்தபோது கால்வழுக்கி தண்ணீரில் விழுந்து தத்தளித்த திலீப், சேற்றில் சிக்கினார். அவருக்கு நீச்சல் தெரியாததால் வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். அவரை மீட்க யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனிடையே அவ்வழியாக வந்த சிலர், குளத்தில் சடலம் மிதப்பது பார்த்து செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்….

The post மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Amalraj ,Tirumala ,Tiruvallur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்