×

கோவை அருகே பயங்கரம் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொன்று எரிப்பு: தந்தையின் நண்பரிடம் விசாரணை

சூலூர்: கோவை அருகே சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் மனைவி நேற்று வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் தொழிலாளியும், அவரது 4 வயது மகளும், நண்பரான அதே பகுதியை சேர்ந்த தனசேகரும் (30) இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்த திட்டமிட்டனர். முன்னதாக 2 பேரும் கஞ்சா புகைத்தனர். பின்னர் சிறுமியின் தந்தையை பொருட்கள் வாங்க மளிகைக்கடைக்கு தனசேகர் அனுப்பி வைத்தார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கருகிய வாடை வீசியது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வந்து பார்த்தனர். அப்போது சிறுமி வயிற்று பகுதிக்கு கீழே முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தாள். அருகிலேயே தனசேகர் தீக்காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவலறிந்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனசேகரிடம் விசாரணை நடத்தினர். கஞ்சா போதையில் இருந்த தனசேகர் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த துணிகளை எடுத்து மேலே போட்டு தீவைத்துள்ளார். இதில் சிறுமியின் வயிற்றுப் பகுதிக்குக் கீழே மட்டும் எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனை தீ விபத்து போன்று ஜோடிப்பதற்காக தனசேகர் வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரின் டியூப்பை உருவி தீவைத்துள்ளார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது….

The post கோவை அருகே பயங்கரம் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொன்று எரிப்பு: தந்தையின் நண்பரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Goa ,Soolur ,Zulur ,Gov ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...