×

பெரம்பூர் 37வது வார்டில் இலவச கால்பந்தாட்ட கிளப் உருவாக்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு வாக்குறுதி

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு நேற்று 37வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் நகர் குடியிருப்பு, நெசவாளர் குடியிருப்பு, கிழக்கு மத்திய குறுக்குதெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப் பகுதி இளைஞர்கள் தங்களுக்கு விளையாட போதுமான இடம் இந்த பகுதியில் கிடையாது. எனவே கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு வேட்பாளர் டில்லி பாபு, `37வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இடம் இருந்தால் கண்டிப்பாக அதனை மாநகராட்சியின் அனுமதியோடு பெற்று கால்பந்தாட்ட மைதானம் அமைப்பது மட்டுமல்லாமல் இலவசமாக பயிற்சி பெறும் வகையில் இலவச கால்பந்தாட்ட கிளப் இந்த பகுதியில் இளைஞர்களுக்காக உருவாக்கித் தரப்படும். அதற்கான செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்’ என இளைஞர்களிடம் வாக்குறுதி அளித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்….

The post பெரம்பூர் 37வது வார்டில் இலவச கால்பந்தாட்ட கிளப் உருவாக்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Perampur 37th Ward ,Congress ,Tillibabu ,Perampur ,37th Ward Dizhagam Alliance Party ,Perampur Assembly Constituency ,Congress Party ,37th Ward ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...