×

‘கேப்டன் மில்லர்’ 3 பாகங்களாக உருவாகிறதா?

சென்னை: வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் ரிலீசான ‘ராக்கி’, ஓடிடி தளத்துக்காக செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், தற்போது விறு விறுப்பாக இயக்கி வரும் படம், ‘கேப்டன் மில்லர்’. பீரியட் பிலிமாக உருவாகும் இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் ஆகியோருடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிட்டது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் 3 பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. தனுஷ் பிறந்தநாளான வரும் 28ம் தேதி அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை சத்யஜோதி பிலிம்ஸ் ரிலீஸ்செய்யும் என்று தெரிகிறது. இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. போர்க்களத்தில் சடலங்கள் பரவிக்கிடக்க, கையில் பெரிய துப்பாக்கியுடன் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் கவலை தோய்ந்த முகத்துடன் நிற்கும் நிற்கும் அக்காட்சி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

The post ‘கேப்டன் மில்லர்’ 3 பாகங்களாக உருவாகிறதா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Arun Matheswaran ,Vasant Ravi ,Bharathiraja ,Raveena Ravi ,Selvaragavan ,OD ,Keerthy Suresh ,Kaitham ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...