×

மூத்த கன்னட நடிகை மரணம் : திரைத்துறையினர் இரங்கல்

பெங்களூரு: மூத்த கன்னட நடிகை பார்கவி நாராயண் நேற்றிரவு பெங்களூருவில் காலமானார். இவரது மறைவுக்கு கன்னட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த கன்னட பழம்பெரும் நடிகை பார்கவி நாராயண் (84) கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டார். இடுப்பு எலும்பு முறிவால் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்க கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இரவு 7.30 மணியளவில் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகனும், நடிகருமான பிரகாஷ் பெலவாடி கூறுகையில், ‘மறைந்த எனது தாயின் உடல், செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும். இதற்கு, எனது தாய் பல ஆண்டுக்கு முன்பே ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களின் கண்கள் கண் மருத்துவ நிறுவனத்திற்கு தானமாக வழங்கப்படும். மூத்த மகள் சுஜாதா மும்பையில் இருந்து வர உள்ளார். எனவே, அவரது உடல் தாமதமின்றி மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும்’ என்றார். மறைந்த நடிகை பார்கவி நாராயண், ‘டூ ட்ரீம்ஸ்’, ‘அசாசின்’, ‘மனு’ உள்ளிட்ட பல கன்னடப்  படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 2019ல், ராஜ்யோத்சவா விருது  வழங்கப்பட்டது. இவர் 600க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு கன்னட திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post மூத்த கன்னட நடிகை மரணம் : திரைத்துறையினர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Barkavi Narayan ,Kannad ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...