×

சென்னை விமானநிலையத்தில் ரூ.22.42 லட்சம் வெளிநாட்டு கரன்சி கடத்திய 3 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் மற்றும் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.22.42 லட்சம் வெளிநாட்டு கரன்சியுடன் 3 பேர் பிடிபட்டனர். சென்னையில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் செல்ல முயன்ற சென்னையை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களின் பைகளை சோதனை செய்ததில் அதற்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தது. அவர்களிடம் இருந்து ரூ.14.57 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல, இலங்கைக்கு செல்லும் சிறப்பு விமானத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பயணியை பிடித்து, அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அந்த உடமைகளுக்குள் ரூ.7.85 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வெளிநாட்டு கரன்சிகளையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் இருந்து துபாய், இலங்கைக்கு ெசல்லும் விமானங்களில் கடத்த இருந்த மொத்தம் ரூ.22.42 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து சென்னையை சேர்ந்த 3 பயணிகளை கைது செய்தனர்….

The post சென்னை விமானநிலையத்தில் ரூ.22.42 லட்சம் வெளிநாட்டு கரன்சி கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dubai ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3...