×

மாநில தலைவர் வர தாமதம் பிரசாரத்திற்கு வந்த மக்களை பட்டினி போட்ட பாஜவினர்: சிவகாசி அருகே சலசலப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் பாஜ வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பகல் 12 மணிக்கு வந்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் ‘‘சிறப்பு கவனிப்பு’’ மூலம் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு, காலை 10 மணிக்கே சேர்களில் அமர வைக்கப்பட்டனர். சிவகாசி பஸ் ஸ்டாண்டிலும் அக்கட்சியினர் வரவேற்பு கொடுக்க காலை 11 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் மதியம் 2 மணியாகியும் அண்ணாமலை வரவில்லை. இதனால் மண்டபத்தில் குழந்தைகளை வைத்து கொண்டு பெண்கள் பசியால் துடித்தனர். ஏராளமான முதியவர்கள் மயக்கமடைந்த நிலையில் சேர்களில் சாய்ந்திருந்தனர். இதன் காரணமாக கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பசியால் காத்திருந்தவர்களுக்கு உணவு கொடுக்காமல் அவர்களை பாஜவினர் சமாதனப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு வழியாக 3 மணிநேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு மேடைக்கு அண்ணாமலை வந்து பேசி விட்டு சென்றார்….

The post மாநில தலைவர் வர தாமதம் பிரசாரத்திற்கு வந்த மக்களை பட்டினி போட்ட பாஜவினர்: சிவகாசி அருகே சலசலப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sivakasi ,Thirutangal ,Virudhunagar district ,
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!