சென்னை: டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை விதிக்க வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிளாஸ்டிக்தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் நிறுவனம் மூலமாக தமிழக அரசு மது விற்பனை நடத்தி வருகிறது. இந்நிலையில் மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களில் விற்க தடை கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்கள் விற்கும் போது, அவை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மதுபான ஆலைகளுக்கு வழங்கப்படுகின்றன. கண்ணாடி பாட்டில்களால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. அதனை மறு சுழற்சி செய்ய முடியும். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியாது. இது சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது, அது சுற்றுச்சூழலை பாதிக்கும் என நீதிபதி கூறினார். எனவே டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை செய்ய முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது….
The post பிளாஸ்டிக் பாட்டில் மாசை ஏற்படுத்தும்; கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.