×

கத்தி முனையில் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பிய பிரபல ரவுடி உள்பட இருவர் கைது

சென்னை: வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில், மது போதையில் இருவர் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோந்து வாகனத்தில் அங்கு வந்த தலைமை காவலர் மாதவன், அந்த இருவரை மடக்கி பிடித்து வாகனத்தில் ஏற்றினார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி போலீசாரை மிரட்டி விட்டு ரோந்து வாகனத்தின் கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பினர். இதுதொடர்பாக, தலைமை காவலர் மாதவன் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தப்பிய இருவரை தேடி வந்தனர்.இந்நிலையில், வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகே அந்த இருவரும்  சுற்றித்திரிவது தெரிந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்தும் இருவரும் ஆட்டோவில் தப்ப முயன்றனர். இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தபோது ஒருவர் தப்பி ஓட முயன்றதில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கை எலும்பு முறிந்தது. பிறகு இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கணேஷ்குமார் (30), அவரது கூட்டாளி சரவணன் (45) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து,ஆட்டோ, கத்திகளை பறிமுதல் செய்தனர்….

The post கத்தி முனையில் போலீசாரை மிரட்டிவிட்டு தப்பிய பிரபல ரவுடி உள்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Villivakkam Cidco Nagar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...