×

நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல்: காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். நீட் தேர்வில் விலக்கு கோரும் சட்ட முன் வடிவு குறித்து பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க, மமக, மதிமுக, இடதுசாரி கட்சிகள், விசிக, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேல்முருகன் எம்எல்ஏ * நீட் எனும் நுழையா தேர்வு காரணமாக பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்* நீட் தேர்வு என்று சொன்னாலே மாணவர்களுக்கு அச்சம், பதற்றம் ஏற்படுகிறது.* தமிழகத்தின் மாநில உரிமையை மீட்க கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈஸ்வரன் * நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல; 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவுபாபநாசம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா* ஆளுநர் அறிக்கையை படிக்கும்போது மனவேதனை அடைகிறேன்* இந்தியாவில் ஆளுநர்கள் தேவையில்லை என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த வேண்டும்.* ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை , காமாலை பார்வையின் பிரதிபலிப்பாக இருக்கிறது என்பதை எப்படி ஏற்க முடியும்.* தமிழக அரசுப் பள்ளிக்கு இணையாக உத்தரப்பிரதேச அரசுப் பள்ளிகளை ஒப்பிட முடியுமா? * ‘தீட்டு என்று சொல்லி, அன்று ஒதுக்கி வைத்தார்கள்.. இன்று நீட் என்று சொல்லி எங்கள் மாணவர்களை ஒதுக்குகிறார்கள்!* நீட் என்ற அரக்கனை ஒழிப்போம்புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ ஜெகன்மூர்த்தி* மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5% இட ஒதுக்கீட்டை 15% ஆக உயர்த்த வேண்டும் * தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிகர்நிலை அனைத்து பல்கலைக்கழகங்களை தமிழ்நாடு அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டு வந்து சட்டம் இயற்றப்பட வேண்டும்சதன் திருமலைக்குமார் * முதலமைச்சர் நேரில் வலியுறுத்தியும் கூட ஒன்றிய அரசின் பரிந்துரைக்கு மசோதாவை அனுப்பவில்லை* அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் ஆளுநர், மாநில அரசின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்தளி ராமசந்திரன்* சமூக நீதியின் ஆணி வேரில் வெந்நீரை ஊற்றுவது போல் நீட் தேர்வு கொண்டு வந்தது ஒன்றிய அரசு* சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. * வேண்டுமென்றே காலம் தாழ்த்தி 142 நாட்களுக்கு பிறகு ஆறுநர் மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.நாகை மாலி* ஆளுநரின் செயல் மக்கள் உணர்வை காயப்படுத்தும் விதமாக உள்ளது* நீட் விலக்கு மசோதாவை 5 மாத காலத்துக்கு கிடப்பில் போட்டு. * அதை மீண்டும் நமக்கே அனுப்பி வைத்தது மாபெரும் துரோகம்* ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் முரணானது முற்றிலும் விரோதமானதுஎஸ்.எஸ்.பாலாஜி* நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் விசிக மட்டும் அல்ல நாடு முழுவதும் உள்ள அனைத்து சக்திகளும் உறுதுணையாக இருக்கும்* நீட் தேர்வு வேண்டாம் என்பதல்ல நம் நோக்கம் நுழைவுத் தேர்வே கூடாது என்பதே நிலைப்பாடு* நீட் தேர்வு என்பது மாநில அரசுத் திட்ட மாணவர்களுக்கு பெறும் சுமையானதுபாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன்* தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை* எந்த ஆளுநரும் சட்டங்களை திருப்பி அனுப்பவில்லை; சட்டங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டனசெல்லப்பெருந்தகை * தமிழ்நாடு மக்களை ஆளுநர் மிகவும் அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் கருதுகிறது* ஆளுநர் அனுப்பிய குறிப்பு தமிழ்நாடு மக்களை வேதனைப்படுத்தியுள்ளது* குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை ஆளுநர் தவறாக பயன்படுத்துவது ஏற்புடையதல்லசி.விஜயபாஸ்கர் * நீட் எதிர்ப்பு கொள்கையில் என்றும் அதிமுக உறுதியாக இருக்கிறது* அதிமுக யாருக்கோ அடிபணிந்து விட்டது என்ற கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்* 1984-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது இவ்வாறு கூறினார். …

The post நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல்: காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Congress ,Visika ,Madhyamk ,Bamka ,CHENNAI ,Legislative Assembly ,NEET ,VISA ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...