×

கோவையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த பாஜ நிர்வாகி கைது

கோவை: கோவை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக போத்தனூரில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி நேற்று பாஜ மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். நேற்று இவர் பிரசாரத்திற்காக போத்தனூர் வந்தார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போத்தனூர் சரக உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ் தலைமையிலான போலீசார் பிரசாரம் நடக்கும் பகுதிக்கு சென்றனர். அங்கு வந்திருந்த வேலூர் இப்ராஹிமிடம்  நீங்கள் முறையான பிரசார அனுமதி பெறவில்லை. நீங்கள் இங்கே பிரசாரம் செய்வது சரியல்ல எனக்கூறி தடுத்தனர். பின்னர், அனுமதியின்றி பிரசாரம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post கோவையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Bothanoor ,Athupalam ,Dinakaran ,
× RELATED ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார்...