×

அவதூறு கருத்துகள் தெரிவிக்க சீமானுக்கு தடை விதித்த ஐகோர்ட் !!

சென்னை: டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தனக்கு எதிராக ஆதாரமில்லாத கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை கோரி டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். அதில், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க சீமானுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. டிஐஜி வருண்குமார் தொடர்ந்த மனு மீது சீமான் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்துக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

The post அவதூறு கருத்துகள் தெரிவிக்க சீமானுக்கு தடை விதித்த ஐகோர்ட் !! appeared first on Dinakaran.

Tags : iCourt ,Seaman ,Chennai ,Chennai High Court ,DIG ,Varunkumar ,Seiman ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!