
டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்க மறுத்ததால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். டிரம்ப் வரி விதிப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
The post எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
