
சென்னை: வரும் 1ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார செ்னை அட்டை) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மெட்ரோ பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. க்யூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும். பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பான ரூ.50க்கும் குறையும் போது, மெட்ரோ பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்கு பதிலாக, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post மெட்ரோ பயண அட்டை ஆக.1 முதல் சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.
