×

மானபங்கம் செய்ததாக மின் ஊழியர் மீது பெண் புகார்

மாமல்லபுரம்: கோவளம் மின்வாரிய அலுவலகத்தில், மின் மீட்டர் கணக்கெடுப்பு பணியாற்றுபவர் முத்துராமன். கடந்த சில நாட்களுக்கு முன் முத்துராமன், மாமல்லபுரம் அடுத்த பேரூர் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மூதாட்டி நாகம்மாள் என்பவரது வீட்டில் மின் மீட்டர் கணக்கெடுத்தார். அப்போது, தவறான மின் கணக்கெடுப்பு செய்து, அதிக தொகையை மின் அட்டையில் எழுதினார். இதை பார்த்த மூதாட்டி, முத்துராமனிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தார். அந்த நேரத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் லோகமூர்த்தி (45) என்பவர், எந்த அடிப்படையில், மின் கணக்கெடுப்பு நடக்கிறது. குறைவாக மின்சாரம் பயன்படுத்துவருக்கு அதிக தொகை எப்படி வந்தது என முத்துராமனிடம் கேட்டுள்ளார். உடனே முத்துராமன், மீட்டரை சரிபார்த்து, முறையான மின் கட்டணமாக சரியான தொகையை எழுதி கொடுத்தார்.இதுகுறித்து லோகமூர்த்தி, தவறான மின் கணக்கெடுக்கும் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவளம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராமன், அங்கு சென்று, லோகமூர்த்தியிடம் தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதுகுறித்து முத்துராமன், லோகமூர்த்தி தன்னை தாக்கியதாக மாமல்லபுரம் போலீசில் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்நிலையில், லோகமூர்த்தி மனைவி மீனா, தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் டிஎஸ்பி, செங்கல்பட்டு எஸ்பி அரவிந்தன் ஆகியோரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கோவளம் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் மின் கணக்கெடுப்பாளர் முத்துராமன், கடந்த மாதம் 29ம் தேதி, அவரது நண்பருடன் எனது வீட்டுக்கு வந்தார்.அங்கு, என்னை அசிங்கமாக பேசி, உனது கணவன் எங்கே, அவனை கூப்பிடு என கூச்சலிட்டார். பின்னர் முத்துராமன், என் புடவையை இழுத்து மானபங்கம் செய்து, 2 பேரும் காலால் எட்டி உதைத்தனர். வலி, தாங்க முடியாமல் கதறினேன். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதை பார்த்ததும், உனது கணவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு, அவர்கள் தப்பி சென்றனர். எனவே, முத்துராமன் மீது துறை ரீதியான நவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் உள்ள எனது கணவரை விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது….

The post மானபங்கம் செய்ததாக மின் ஊழியர் மீது பெண் புகார் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Muthuraman ,Kovalam Electricity Board ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...