×

சேதமான கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய விஏஓ அலுவலகம் கட்டித்தர கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

குமராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரத்தெரு, கடைவீதி, பிள்ளையார் கோவில் தெரு, பழைய வீதி, அண்ணா தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் தேவைக்காக தினமும் இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் மேற்கூரைகள் பெயர்ந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வர்த்தக சங்க தலைவர் தமிழ் வாணன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேதமான கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய விஏஓ அலுவலகம் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : VAO ,Kattumannarkovil ,Kumaratchi ,Agraharath Street ,Kadayaveethi ,Pillayar Kovil Street ,Old Street ,Anna Street ,South Street… ,Dinakaran ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...