×

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி : தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாமக்கல் உட்பட தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களில் நிலவும் தாமதம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் விளக்கம் தருமாறு, மாநிலங்களவையில் திமுக எம்.பி. ராஜேஷ் குமார் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.இந்த கேள்விக்கு ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில், ‘தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்தாண்டு செப்டம்பருக்குள் முடியும். என்றார். மேலும் கொரோனா பேரிடர் மற்றும் சுற்றுசூழல் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தாலும் ஒப்பந்ததாரர்களின் மெத்தனத்தாலும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளை வேகப்படுத்த சம்பந்தப்பட்ட ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிதின் கட்கரி கூறியுள்ளார். சென்னை முதல் தடா வரையிலான 6 வழிச்சாலை செட்டிகுளம் முதல் நத்தம் வரையிலான 4 வழிச்சாலை, சோழபுரம் முதல் தஞ்சை வரையிலான 4 வழிச்சாலை உட்பட 9 முக்கிய சாலை திட்டங்கள் நடப்பாண்டிற்குள் முடிக்கப்படும் என்று நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.இதே போல சேலம் முதல் சென்னை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக 4 வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என்றும் திருச்சியில் இருந்து திண்டிவனம் செல்லக்கூடிய 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் நாமக்கல் எம்பி சின்ராஜ் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் கோரிக்கை வைத்துள்ளார். சேலம் முதல் உளுந்தூர்பேட்டைக்கு இடையில் ஆத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 நகரங்களின் புறவழிச்சாலைகள் இருவழிச்சாலைகளாகவே இருப்பதையும் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதையும் நிதின் கட்கரியிடம் சுட்டிக் காட்டினார்….

The post தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 9 நெடுஞ்சாலை திட்டங்கள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister Nitin Gadkari ,Delhi ,Union ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...