- ஆதிமுகா
- மாவட்டம்
- செயலாளர்கள்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- ஆதிமுக மாவட்ட செயலாளர்கள்
- எடப்பாடி பழனிசாமி
- ராயப்பேட்டை
- செயலாளர் ஜெனரல் எடப்பாடி
- தின மலர்
சென்னை: சென்னையில் மே 29, 30ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் வெளியான அறிகையில்; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 29.5.2025, 30.5.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் மே 29, 30ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
