தர்மபுரி, மே 13: பாலக்கோடு எர்ணஅள்ளி மேம்பாலம் அருகே, சுரங்கத்துறை அதிகாரி புவனமாணிக்கம் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு, டிரைவர் கீழே குதித்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, லாரியில் சோதனையிட்டபோது அதில், மண் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 3 யூனிட் மண்ணுடன் அந்த லாரியை பறிமுதல் செய்து, பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, தப்பிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பாலக்கோடு அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.
