ராமநாதபுரம்: கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளினை தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000ம், இரண்டாம் பரிசு ரூ.7,000ம், மூன்றாம் பரிசு ரூ.5,000 என அதற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர்பானு கலந்து கொண்டார்.
The post பேச்சு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.
