×

எடப்பாடி உத்தரவு கொடுத்தால் போதும் ஆயிரம் இளைஞர்களை திரட்டி துப்பாக்கி ஏந்தி போருக்கு ரெடி: ராஜேந்திரபாலாஜி உணர்ச்சிமயம்

சிவகாசி: எடப்பாடி உத்தரவிட்டால் ஆயிரம் இளைஞர்களை திரட்டி துப்பாக்கி ஏந்தி போருக்கு செல்ல தயார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடங்கியுள்ளது. இந்த போர் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர். இந்திய ராணுவத்திற்கு முழு ஆதரவை அதிமுக தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்துக்கு தேவையான வீரர்களை அனுப்ப விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தயாராக உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் இளைஞர்களை திரட்டி இந்திய ராணுவத்துக்கு எனது தலைமையில் செல்ல தயாராக இருக்கிறோம். 10 நாள் துப்பாக்கி பயிற்சி கொடுத்தால் போதும். நாங்களும் களத்தில் இறங்கி போரிட தயார். நாங்கள் நேதாஜி வழி வந்தவர்கள். அவரது நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்கள் நாங்கள். இவ்வாறு தெரிவித்தார்.

The post எடப்பாடி உத்தரவு கொடுத்தால் போதும் ஆயிரம் இளைஞர்களை திரட்டி துப்பாக்கி ஏந்தி போருக்கு ரெடி: ராஜேந்திரபாலாஜி உணர்ச்சிமயம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Rajendra Balaji ,Sivakasi ,Former Minister ,AIADMK ,Chief Minister ,Edappadi Palaniswami ,Virudhunagar… ,
× RELATED ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர்...