வடமதுரை, மே 6: வடமதுரை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வடமதுரை உபகோட்டத்தில் உள்ள அய்யலூர் துணை மின் நிலையத்தில் நாளை (7ம் தேதி) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி
அய்யலூர், கலர்பட்டி, கஸ்பா அய்யலூர், மணியகாரன் பட்டி, கொன்னையம்பட்டி, குருந்தம்பட்டி, கோம்பை, கிணத்துப்பட்டி, புத்தூர், அரண்மனைப்பட்டி, சடையம்பட்டி ஆகிய ஊர்களை சுற்றி உள்ள கிராம பகுதிகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
The post நாளை மின்தடை appeared first on Dinakaran.
