×

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறை கடைபிடிக்க வேண்டும்: அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க விதிமுறைகளை 100% கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட வேண்டும். மாணவிகள் உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம்.

மாணவிகள் பயணம் செய்யும் பேருந்துகளில் பெண் உதவியாளர்களே பணிபுரிய வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. விதிமுறைகளை செயல்படுத்துவதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

The post பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விதிமுறை கடைபிடிக்க வேண்டும்: அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...