- நீர் மோர்
- மதுரை
- சித்தன்
- Vilangudi
- நீதிமன்றம்
- கூடல்புதூர் காவல் துறை
- நீர் மோர் பாண்டல்
- மதுரை-திண்டுக்கல் சாலை
- அஇஅதிமுக
- தின மலர்
மதுரை, ஏப். 26: மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சித்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுக சார்பில் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலுக்கு, கூடல்புதூர் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதால், அங்கு நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.மதி ஆகியோர் மனு குறித்து கூடல்புதூர் போலீசார் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post நீர்மோர் பந்தலுக்கு அனுமதி கோரி மனு appeared first on Dinakaran.
