தஞ்சாவூர், ஏப்.25: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உதவிசெயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்புத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம், ஊரகப்பகுதிகளில் அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் பழுது நீக்கம் செய்தல், சிறுபாசன ஏரி மேம்படுத்தும் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம்,
பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குக்கிராமங்கள் அடிப்படை தேவைகள் நிறைவேற்றும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதிதிட்டம்,தூய்மை பாரத இயக்கம் ஆகிய திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஊரகவளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வளர்ச்சி பணிகள் ஆய்வு கூட்டம்: கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.
