தர்மபுரி, ஏப்.23: பழைய தர்மபுரி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (35), சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம், தனது மகன்களான சுசாந்த் (9), பூங்கவின் (6) ஆகியோரை விவசாய கிணற்றில் நீச்சல் கற்று கொடுக்க அழைத்து சென்றார். அப்போது சுசாந்த்துக்கு, ரஞ்சித் நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பூங்கவின், எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கினான். இதைப்பார்த்த ரஞ்சித் அவனை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், பூங்கவின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நீச்சல் பழகிய சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி appeared first on Dinakaran.
