தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி மதிகோண்பாளையம் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சந்தனூர் முனியப்பன் கோயில் அருகே, அவ்வழியாக டிப்பர் லாரியில் வந்த டிரைவர், அதிகாரிகளை பார்த்ததும் வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பினார். பின்னர், லாரியில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 2யூனிட் மண் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மதிகோண்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மண் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.
