சோழவந்தான், ஏப். 18: சோழவந்தான் பஸ் நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த நபரை பிடித்து சோதனையிட்டதில், அவரது கைப்பையில் 1.100 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த சக்திவேல்(45) என்பதும், சோழவந்தான் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதும் உறுதியானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.
The post கஞ்சாவுடன் வாலிபர் கைது appeared first on Dinakaran.
