×

கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண்

சென்னை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் யோகராணி (26). இவர், சைதாப்பேட்டையில் உள்ள சகோதரி வீட்டில் தங்கி, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி தி.நகர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென யோகராணி அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறிக்க முயன்றுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட யோகராணி, கழுத்தில் கிடந்த செயினை ஒரு கையால் பிடித்துக் கொண்டார். அடுத்து துணிச்சலாக மற்றொரு கையால் அந்த மர்ம நபரைப் பிடித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜா (40) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். யோகராணியின் இந்தச் செயலைக் கண்ட பொதுமக்களும் போலீசார் பாராட்டினர்.

The post கொள்ளையனை மடக்கி பிடித்த இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Yogarani ,Trichy district ,Saidapet ,Valluvar Kottam ,T. Nagar ,
× RELATED சூலூர் அருகே பரபரப்பு; சாலையில் அம்மன் சிலை மீட்பு