வத்தலக்குண்டு, ஏப். 12: வத்தலக்குண்டு அருகே சேதமடைந்த மின்கம்பத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இதனை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டு அருகேயுள்ளது விராலிபட்டி கிராமம். இங்கு ராமநாயக்கன்பட்டி சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் விழும் நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மின்வாரிய துறையினர் ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கொடுத்துள்ளனர்.
The post வத்தலக்குண்டு விராலிபட்டியில் சிதிலமடைந்த மின்கம்பத்தால் அச்சப்படும் மக்கள்: மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
