*டூவீலர் மீது டெம்ேபா மோதியது
தேன்கனிக்கோட்டை : தளி அருகே, ஸ்கூட்டியில் சென்ற அண்ணன், தம்பி டெம்போ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சூடசந்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் பத்ரி.
இவரது மகன்கள் பிரீத்தம் (19), பவன் (17). அண்ணன் தம்பியான இருவரும், பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல், இருவரும் ஸகூட்டியில் தளியில் இருந்து பேளகொண்டப்பள்ளிக்கு சென்றனர்.
பிரீத்தம் ஸ்கூட்டியை ஓட்டினார். மதகொண்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே சென்றனர். அப்போது அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை முந்த முயன்ற போது, எதிரே வந்த டெம்போ, பிரீத்தம் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சகோதரர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அண்ணன், தம்பி விபத்தில் பலி appeared first on Dinakaran.
