×

ஜிப்மரில் நர்சிங் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: போலி பணி ஆணை வழங்கிய புதுவை பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு

 

புதுச்சேரி, ஏப். 11: ஜிப்மரில் நர்சிங் வேலை வாங்கித்தருவதாக கூறி போலி பணியாணை வழங்கி மோசடி செய்த புதுவை பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மரில் நர்சிங் வேலை வாங்கி தர புதுவையில் ஆள் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் புதுவை பாஜக பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜகணபதி (எ) விக்கி (35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை ெகாடுத்துள்ளனர். பின்னர் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.

இதையடுத்து விக்கி, அவர்களுக்கு போலியான ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐடி கார்டு, ஜிப்மர் பணிஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்து போலியாக தயாரித்து அனுப்பியுள்ளனர். இதனை கண்டு ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஜெயக்கொடி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் விக்கி (எ) ராஜகணபதி, கோட்டச்சேரி நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விக்கி (எ) ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post ஜிப்மரில் நர்சிங் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: போலி பணி ஆணை வழங்கிய புதுவை பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : JIPMER ,BJP ,Puducherry ,Karaikal ,Puducherry… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை