×

வெயிலின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும்: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) பேசுகையில், ‘‘வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு, ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா’’
என்றார்.

இதற்கு பதில் அளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘முதல்வர் வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து அதையும் இப்பொழுது பேரிடராக அறிவித்திருக்கிறார். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நிவாரணம் அரசாங்கம் வழங்கும். பொதுவாக வெயில் வருகிற நேரத்தில் நம்மை நாமே காப்பற்றிக்கொள்ளக்கூடிய அந்தச் சூழ்நிலை உருவாக்கவேண்டும். அதற்கு வேண்டிய அந்த சரியான உத்திகளை அரசாங்கம் சொல்லியிருக்கிறது. அதன்அடிப்படையில் மக்கள் இருப்பார்கள் என்று சொன்னால், வெயிலின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும், முடிந்த அளவிற்கு அவர்களுக்கு அரசாங்கம் என்ன உதவி செய்யமுடியுமோ, அந்த உதவிகளை அரசாங்கம் செய்யும்” என்றார்.

The post வெயிலின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும்: அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Adimuka ,Thirumangalam ,R. B. Udayakumar ,Minister of Revenue and Disaster Management ,K. K. S. S. R. ,Ramachandran ,Tamil Nadu government ,Adimuka MLA ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்