×

பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்வு

 

வந்திராயிருப்பு, ஏப்.5: வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பிளவக்கல் பெரியாறு அணை. இந்த அணை 47.56 அடி முழு கொள்ளளவு கொண்டது. இந்த அணை மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 25 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 28 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Plavakkal Dam ,Vanthirairuppu ,Plavakkal Periyar Dam ,Western Ghats ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை