×

தனியார் சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்பு சுரங்கம் விஸ்தரிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம்

அரியலூர், ஏப்.4: அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு தனியார் சிமெண்ட்ஸ் ஆலையின் சுரங்கம் (கன்கர் குவாரி) விஸ்தரிப்பு 4.37.0 ஹெக்டேர், புல எண். 226/2பி, 226/2C – 226/2டி மற்றும் பிற கல்லங்குறிச்சி கிராமம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டத்தில் அமைய உள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கல்லங்குறிச்சி கிராமம், லால்குடியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இத்திட்டம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையம் 4டி, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தனர். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன்கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தனியார் சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்பு சுரங்கம் விஸ்தரிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Chettinadu ,Cements ,Ariyalur Taluk, Ariyalur District ,No. ,Kallangurichi Village ,Ariyalur Taluk, Ariyalur… ,Dinakaran ,
× RELATED ரூ.10 ஆயிரம் கோடிக்கு போலி மருந்தில்...