நெல்லை, மார்ச் 30: கங்கைகொண்டான் சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது தொழிலாளி திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார். நெல்லை அருகேயுள்ள மானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (47). இவர் கங்கைகொண்டான் அருகேயுள்ள சிப்காட் வளாகத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று பணியில் இருந்த போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை சக ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியர் சாவு appeared first on Dinakaran.
