- மன்னார்குடி
- டாக்டர்
- திருப்பதியில்
- மாவட்ட நியமிக்கப்பட்ட அலுவலர்
- திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை
- மன்னார்குடி...
மன்னார்குடி, மார்ச். 28: திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் திருப்பதி அறிவுறுத்தலின் பேரில் கலப்பட பொருட்களை எளிதில் எவ்வாறு கண்டறிவது மற்றும் செரிவூட்டப்பட்ட உணவு பொருட்கள் தொடர் பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடி நகராட்சி மாடல் நடுநிலைப்பள்ளி யில் தலைமையாசிரியை மாலதி முன்னிலையில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உணவுப் பொருள் கலப்படத்தை வீட்டிலிருந்து கண்டறிவதற்கு பொது விரைவு சோதனைகள் குறித்தும், உள்ளூர் உணவை சாப்பிடுங்கள், ப
ருவ கால உணவை சாப்பிடுங்கள், பல விதமான உணவை சாப்பிடுங்கள் உள்ளிட்ட உணவுகள் குறித்து படத்துடன் விளக்கம் அளித்தார். மேலும், செறிவூட்டப்பட்ட பால், எண்ணெய், அரிசி, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றின் நன்மைகள் குறித்தும், சரிவிகித உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி அலுவலர் ஆர்த்திகா, பகுப் பாய்வாளர் சக்திவேல், ஆசிரியை மனோன்மணி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post மன்னார்குடியில் மாணவர்கள் பங்கேற்ற கலப்பட பொருட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.
