×

கண்ணாடி மாளிகையில் புதிய மலர் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் புதிய மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.

அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில், பல ஆயிரம் மலர் தொட்டிகள் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகளில் மலர் செடிகள் வைக்கப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும். அதேபோல், பூங்காவில் கண்ணாடி மாளிகையில் பல்வேறு மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதற்காக, ஆண்டு முழுக்க பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்நிலையில், தற்போது கோடை சீசனுக்காக பூங்கா தயார் ெசய்யப்பட்டு வரும் நிலையில், கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த கண்ணாடி மாளிகையில், தற்போது டெப்போடில்ஸ், ஆந்தூரியம், பால்சம், ரெனிகுலாஸ் உட்பட பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, உள்ள மலர் தொட்டிகளை அகற்றிவிட்டு தற்போது புதிய மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post கண்ணாடி மாளிகையில் புதிய மலர் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Glass House ,Feeder Government Botanical Garden ,Nilgiri ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக...