×

மானூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மானூர்,மார்ச் 21: மானூர் அருகே வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மானூர் அருகேயுள்ள கீழச்செழியநல்லூரைச் சேர்ந்த ராசையாவின் மகன் கார்த்திக் (20). கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்துவந்த இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தனது அறையில் தூங்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் எழுந்து வெளியே வராததால் குடும்பத்தினர் கதவை தட்டியுள்ளனர். கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திக் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மானூர் போலீசார், கார்த்திக்கின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post மானூர் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Manur ,Karthik ,Rasaiah ,Keezhachezhiyanallur ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை