×

ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் 2வது நாளாக போராட்டம்!!

டெல்லி: ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். குறைக்காதே குறைக்காதே தொகுதிகளை குறைக்காதே என்று எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் 2வது நாளாக போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Union Government ,Delhi ,Tamil Nadu ,DMK ,MDMK ,VVIP ,MPs ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...