×

மாநில சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வேதாரண்யம், மார்ச் 20: வேதாரண்யம் அடுத்த தோப்புதுறை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநில அளவில் தஞ்சையில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது தஞ்சையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தோப்புதுறை நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் முகேஷ், நேத்ரவர்மா சிறப்பாக சிலம்பம் விளையாட்டி மாநில அளவில் பரிசுகளை வென்றனர்.

நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் புயல் குமார் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் அனிதா, மாணிக்கம், சாந்தி, இந்திராணி, கலைச்செல்வி, தனிகாசினி சிலம்பம் ஆசிரியர் மகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி மேலாண்மை குழுவினர், பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கினர்.

The post மாநில சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Silambam ,Vedaranyam ,Thoppudhurai Municipal Primary School ,Thanjavur ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை