×

எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். ரூ.73 கோடி இழப்பீடு செலுத்தக் கோரிய உத்தரவுக்கு தடை விதிப்பு

சென்னை: 2023ல் எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். ரூ.73 கோடி இழப்பீடு செலுத்தக் கோரிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. சென்னையில் 2023ல் வெள்ளம் ஏற்பட்டபோது மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி. இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் இழப்பீடு கோருவது நியாயமற்றது. இழப்பீடாக ரூ.19 கோடியை வங்கி உத்தரவாதமாக 4 வாரத்தில் செலுத்த சிபிசிஎல் நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது.

The post எண்ணெய் கசிவு விவகாரத்தில் சி.பி.சி.எல். ரூ.73 கோடி இழப்பீடு செலுத்தக் கோரிய உத்தரவுக்கு தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : C. ,B. C. L. ,Chennai ,C. S. ,South Zone National Green Tribunal ,Tamil Nadu Pollution Control Board ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...