- பொது வசதி மையம்
- அமைச்சர் தா. மோ.அன்பரசன்
- சட்டமன்ற உறுப்பினர்
- தென்முக
- ஆதிமுகா
- நிலக்கீல் தொகுதி விருதி
- மொ. அன்பராசன்
- விர்வீடு
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நிலக்கோட்டை தொகுதி எம்எல்ஏ தேன்மொழி (அதிமுக) பேசுகையில், நிலக்கோட்டை தொகுதி விருவீடு பகுதிகளில் அரசு முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘விருவீடு பகுதியில் அரசு முருங்கை இலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் செயற்குறிப்பு, தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை.
திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் முருங்கைக்காய்கள், முருங்கை இலைகள் வீணாகாமல் தடுக்க தொழில்முனைவோர் தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும்பட்சத்தில் வழிகாட்டுதல்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 5 வகையான சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கூடிய மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகள் வழங்கப்படும். 20 தொழில் முனைவோர்கள் சேர்ந்து வந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம் அமைக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
The post 20 தொழில் முனைவோர்கள் சேர்ந்தால் குறுங்குழும திட்டத்தின் கீழ் பொது வசதி மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில் appeared first on Dinakaran.
