வடமதுரை, மார்ச் 19: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே பாஜக கட்சியினர் நேற்று முன்தினம் மாலை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜ ஒன்றிய தலைவர் வீரப்பன் என்ற சுதாகர் (45) உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
The post வடமதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜவினர் மீது வழக்கு appeared first on Dinakaran.
