தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ரங்காபுரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கூத்தப்பாடியை சேர்ந்த சத்யராஜ் (38) என்பவர் பணி புரிந்து வருகிறார். கடந்த 10ம் தேதி, ஆலையில் இருந்த கிரஷர் கோன் மெட்டல், 6 மோட்டார்கள் திருடு போனது. இதன் மதிப்பு ₹77 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சத்யராஜ், பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆலையில் பணி புரியும் காவலாளி முனியப்பன் (35) என்பவர், ஆலையில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
The post குவாரியில் திருடிய காவலாளி கைது appeared first on Dinakaran.
